Monday, March 15, 2010

அங்கிருந்த நாற்காலியில் சிறிது நேரம் அமர்ந்திருந்தேன் .வெளியிலிருந்து ஒரு பெண் உள் வந்து எனக்கு பின்னால் இருந்த மின்சார பொத்தானை அழுத்தினாள் ,எங்கோ மின் நீர் இறைப்பான் ஓடும் சப்தம் கேட்டது ,சப்தம் வந்த பக்கத்திலிருந்து ,ஒரு வாளி தண்ணீருடன் வந்து முற்றத்தில் தெளிக்கும் சப்தம் கேட்டது .என் மூளைக்கு புரிந்தது அவள் வீட்டு பணியாள் என்று .திரும்ப உள்ளே வந்த அவள் என்னையே பார்த்தபடி அடுத்த அறைக்குள் நுழைந்தாள் , சிறிது நேரத்தில் பால் காயிப்பான் விசில் அடித்து ஓய்ந்ததும் ,கையில் நான்கு குவளையுடன் எனை தாண்டி இன்னொரு அறைக்கதவை மெதுவாக திறந்து ,"அம்மா ,அம்மா எழுந்திருங்கம்மா மணி ஏழு ஆவுது ,அய்யா இந்தாங்க இந்த காபி எடுத்துக்கோங்க அய்யா இது தான் உங்களுக்கு சக்கரை இல்லாம போட்டது ,சரி அய்யா வெளியில ஒருத்தர் ரொம்பநேரமா இருக்காரே யார்யா அவரு . 'ஆமா அவன்தான் என் சின்ன வயசு நண்பன் ,அவனுக்கும் காபி கொடு போ "என்றதும் வெளியே வந்து பின்னர் என்னிடமும் ஒரு காபி கொடுத்தாள் ,காபியில் நுறை இருந்தது ,பழைய ருசி இல்லை .மணி ஏழு அடித்து ஓய்ந்தது ,ஆனால் யாரும் எழுந்ததாக தெரியவில்லை