Wednesday, May 6, 2009
சுற்றிப்பார்த்தால் சற்று தொலைவில் ஆறு வந்து கொண்டிருந்தான் .அருகில் வந்தவன் "என்னடா தூங்கிவிட்டாயா"என்றபடி கட்டிலில் அமர்ந்தான் ."ஆமாடா இதுவரை சாப்பிடாத ருசியான நமது பாரம்பரிய சாப்பாடு ,அதிகமாக போட்டு விட்டாய் அதனால்தான் தூக்கம் "அப்ப உன் மேல் தப்பில்லை ,சாப்பாடு போட்டவன் மேல்தான் தப்பு ,என்று சிரித்தான் ."டேய் மனிதன் யாராவது தான் செய்த தவறை ஒத்துக்கொண்டுள்ளனா ,நானும் சராசரி மனிதன்தான் ,மகாத்மா அல்ல " "இன்னும் நீ மாறவில்லை எல்லாவற்றுக்கும் பதில் வைத்திருக்கிறாய் " என்றான். மீண்டும் நடக்க ஆரம்பித்தோம் ,சற்று தொலைவில் உள்ள குளத்தில் முகத்தை கழுவினோம். மீன்கள் துள்ளிகுதித்து விளையாடின ,சிறு வயதில் துண்டை விரித்து மீன் பிடித்த ஞாபகம் வந்து போனது ,இனி அந்த நாட்கள் திரும்ப வருமா ,இதோ நாங்கள் கபடி விளையாடிய களம் இப்போதும் சில சிறுவர்கள் விளையடிக்கொண்டிருந்தார்கள் ,என் மனம் ஏங்கியது ,பெருமூச்சும் வந்தது .சிறிது தூரம் நடந்தோம் . " சரி ஆறு திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது "என்றேன்.அவனோ " திருமணத்துக்கு முன்பு எப்போது எப்போது என்று கேட்ட மனது .திருமணம் முடிந்து ஒரு வாரம் நன்றாகவே இருந்தது ,ஒரு மாதத்தில் லேசான சலிப்பு தட்டியது ,இப்போது ஆறு மாதமாகிவிட்டது,லேசாக புரிய ஆரம்பித்திருக்கிறது ,பாசக்கயிற்றுக்கும் ,தாலிக்கயிற்றுக்கும் நடுவில் சிக்கிக்கொண்டேன் என்று " " எனக்குப்புரியவில்லை " என்றேன் . " ஆமாடா தாய் என்கிற பாசக்கயிற்றுக்கும் , மனைவி என்கிற தாலி க்கயிறுக்கும் நடுவில் வில்லாய் வளைந்து கொடுக்கிறேன் .தாயிடம் பாசம் இருக்கிறது ,மனைவியிடம் ஆசை இருக்கிறது ,இது இரண்டுமே எனக்கு தேவைப்படுகிறது ,ஆனால் அவர்களோ ஏதாவது ஒன்றுதான் வேண்டும் என்கிறார்கள் .என்னசெய்வது இரண்டுக்கும் நடுவில் நிற்க்கிறேன் " என்றான் - தொடரும் ( பிழையிருந்தால் பொறுத்தருள்க)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment