இருவருக்கும் தலைவாழை இலையில் இட்டிலியும்,
சட்டினியும், சாம்பாரும் பரிமாறினார்கள் . இட்டிலி தொடும்போது மல்லிகைப்பூவையும் ,வாயில் இடும்போது பனிக்கட்டியையும் ஞாபகப்படுத்தியது .இந்த வாசனையும் ருசியும் வேறெங்கும் இதுவரை
கிடைக்கவில்லை.வயிறு முட்ட சாப்பிட்டோம் ,கை கழுவ தட்டு கொடுத்தார்கள் கை கழுவிய பின் கையை ஊன்றி எழுந்தோம் .பத்து நிமிடம் கழித்து ஆறுவும் நானும் அவனுடைய வயலுக்கு கிளம்பினோம்( ஆறுமுகத்துக்கு விவசாயம்தான் முழுநேர தொழில் .என்னுடன் கல்லூரி வரை படித்திருந்தாலும் ,விவசாயம் அவனுக்கு மிகவும் பிடித்தது )
வழியில் அவனை பார்த்த பெரியவர்கள் 'என்ன தம்பி வயலுக்கா ' என்றார்கள் .சிறியவர்கள் இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு வணக்கம் சொன்னார்கள் .அவனுடன் நடப்பதற்கே கம்பீரமாக இருந்தது .வழியில் எதிரில் பள்ளிக்கு செல்லும் சிறுவர்கள் ஒரு தோளில் பையை போட்டும் மறு தோளில் நண்பர்களின் கையை போட்டும் எங்களை கடந்து போனார்கள் .இதோ நாங்கள் படித்த பள்ளிக்கூடம்,சைக்கிளில் வந்து இறங்கிய எங்களுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த வகுப்பு ஆசிரியருக்கு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு வணக்கம் சொன்னோம் .அவரும் பதில் வணக்கம் சொல்லி 'என்னடா தமிழ் எப்பொழுது வந்தாய் ,
என்ன செய்கிறாய் ,கவிதை கதைகளெல்லாம் எழுதுகிறாயா'என்றார் .
'நான் சென்னையில் அரசு அலுவலகத்தில் வேலை செய்கிறேன் ,கவிதை எழுத நேரம் இல்லை அய்யா ' என்றேன் .'சரி எங்களை எல்லாம் மறந்து விடாதே 'என்றார் . 'எப்படி அய்யா ,எழுத்தறிவித்தவன் இறைவன்றோ '
என்பதிலில் அகம் மலர்ந்தார் ,அது முகத்தில் தெரிந்தது.பள்ளிமணி அடித்தது நடந்த சிறுவர்கள் ஓட ஆரம்பித்தார்கள் .ஆசிரியரும் உள்ளே சென்றுவிட்டார் .மீண்டும் நடக்க ஆரம்பித்தோம் .......தொடரும்
Sunday, March 1, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment