Thursday, January 15, 2009

1989 - 2009

காலைகதிரவன் பொன்னிற விரல்களால் பூமி குழந்தையை தடவி உச்சி முகர்ந்து எழுப்பியபோதே நான் அந்த கிராமத்தில் பேருந்திலிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தேன், இதமான காற்றும் இனிமையான குயிலின் குரலும், கூரையின் மேல் சிறகடித்து கூவும் சேவலும், பூப்பூவாய் தேன் தேடும் பட்டாம்பூச்சியும், பாலுடன் காத்திருக்கும் பசுவின் குரலும், அதை தொடர்ந்து கேட்கும் ஓடிவரும் கன்றின் குரலும், காளையின் கழுத்தில் கட்டியிருக்கும் சலங்கையின் சப்தமும், எனை கடந்துபோக நான் நடந்துபோக அந்த தெருமுனை பிள்ளையார் கோவிலில் கால்கள் நின்றன. குடைபோல் விரிந்த அரசமரத்தடியில் எருக்கமாலை அணிந்த பிள்ளையாரை என்கைகள் தானாகவே கும்பிட்டன என்மனமோ இந்த இனிமையான உலகத்தில் எனை படைத்த இறைவனின் திருவடியில் சரணடைந்தது - தொடரும்

No comments: